أَنَّهَا، «أَتَتْ بَابُنٍ لَهَا صَغِيرٍ لَمْ يَأْكُلِ الطَّعَامَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَجْلَسَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حِجْرِهِ فَبَالَ عَلَى ثَوْبِهِ، فَدَعَا بِمَاءٍ فَنَضَحَهُ وَلَمْ يَغْسِلْهُ»
பாடம் : 137
குழந்தையின் சிறுநீர் பட்ட ஆடையை எவ்வாறு கழுவுவது ?
374. உம்மு கைஸ் பின்த் பிஹ்சன் அவர்கள் உணவு உட்கொள்ளாத தனது சிறு குழந்தையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்த குழந்தையை தனது மடியில் உட்கார வைத்தார்கள். அப்போது குழந்தை அவர்களது ஆடையில் சிறுநீர் கழித்து விட்டது. நபி (ஸல்) அவர்கள் உடனே தண்ணீர் கொண்டு வரச் சொல்லி அதை கழுவாமல் அதில் தண்ணீர் தெளித்தார்கள்.
அறிவிப்பவர் : உம்மு கைஸ் பின்த் மிஹ்சன்.