🔗

அபூதாவூத்: 375

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

كَانَ الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ فِي حِجْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَالَ عَلَيْهِ فَقُلْتُ: الْبَسْ ثَوْبًا وَأَعْطِنِي إِزَارَكَ حَتَّى أَغْسِلَهُ. قَالَ: «إِنَّمَا يُغْسَلُ مِنْ بَوْلِ الْأُنْثَى وَيُنْضَحُ مِنْ بَوْلِ الذَّكَرِ»


375. அலீ (ரலி) அவர்களின் மகனார் ஹுசைன் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மடியில் இருக்கும் போது அவர்கள் மடி மீது சிறுநீர் கழித்து விட்டார்கள். வேறு ஆடையை அணிந்து கொண்டு உங்களின் இடுப்பாடையை கழுவுவதற்கு என்னிடம் கொடுங்கள் என்று நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். பெண் குழந்தையின் சிறுநீருக்காக மட்டுமே கழுவப் பட வேண்டும். ஆண்குழந்தையின் சிறுநீருக்காக தண்ணீர் தெளிக்கப் படவேண்டும் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : லுபாபா பின்த் அல்ஹர்ஸ்.