أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَ إِلَى سَعْدِ بْنِ عُبَادَةَ، فَجَاءَ بِخُبْزٍ وَزَيْتٍ، فَأَكَلَ، ثُمَّ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُونَ، وَأَكَلَ طَعَامَكُمُ الْأَبْرَارُ، وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلَائِكَةُ»
3854. நபி (ஸல்) அவர்கள் ஸஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடம் வந்தார்கள். அவர் (நோன்பு திறப்பதற்காக) ரொட்டியையும், ஸைத்தூன் எண்ணெயையும் கொண்டுவந்தார். நபி (ஸல்) அவர்கள் அதைச் சாப்பிட்டார்கள்.
பின்னர், நபி (ஸல்) அவர்கள் “உங்களிடத்தில் நோன்பாளிகள் நோன்பு திறந்துள்ளனர். உங்களின் உணவை நல்லோர்கள் சாப்பிட்டனர். உங்களுக்கு வானவர்கள் இறையருளை வேண்டுகின்றனர்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)