🔗

அபூதாவூத்: 3855

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابَهُ كَأَنَّمَا عَلَى رُءُوسِهِمُ الطَّيْرُ، فَسَلَّمْتُ ثُمَّ قَعَدْتُ، فَجَاءَ الْأَعْرَابُ مِنْ هَا هُنَا وَهَا هُنَا، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، أَنَتَدَاوَى؟ فَقَالَ: «تَدَاوَوْا فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَمْ يَضَعْ دَاءً إِلَّا وَضَعَ لَهُ دَوَاءً، غَيْرَ دَاءٍ وَاحِدٍ الْهَرَمُ»


அத்தியாயம்: 27

மருத்துவம்.

பாடம்:

மருத்துவம் செய்துக் கொள்ளுதல்.

3855. உஸாமா பின் ஷரீக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஒரு தடவை நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் தலைகளில் பறவைகள் அமர்ந்திருப்பது போல் அமைதியாக இருந்தார்கள். நான் அவர்களுக்கு ஸலாம் கூறினேன். பிறகு அமர்ந்துக் கொண்டேன்.

அப்போது பல பக்கங்களிலிருந்து கிராமவாசிகள் வந்தார்கள். அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் நோய்களுக்கு மருத்துவம் செய்து கொள்ளலாமா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “மருத்துவம் செய்து கொள்ளுங்கள்! ஏனெனில் எந்த நோயையும் அதற்குரிய மருந்தில்லாமல் அல்லாஹ் வைத்திருக்கவில்லை. ஆனால், ஒரு நோய் மட்டும் விதிவிலக்கு; அது முதுமை (முதுமை என்ற ஒரு நோயைத் தவிர. இதற்கு மருந்தில்லை) என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உஸாமா பின் ஷரீக் (ரலி)