كُنْتُ مَمْلُوكًا لِأُمِّ سَلَمَةَ فَقَالَتْ: أُعْتِقُكَ وَأَشْتَرِطُ عَلَيْكَ أَنْ تَخْدُمَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا عِشْتَ فَقُلْتُ: «وَإِنْ لَمْ تَشْتَرِطِي عَلَيَّ مَا فَارَقْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا عِشْتُ فَأَعْتَقَتْنِي، وَاشْتَرَطَتْ عَلَيَّ»
பாடம்:
நிபந்தனையிட்டு அடிமையை உரிமை விடுவது.
3932. ஸஃபீனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஆரம்பத்தில் நபி-ஸல்-அவர்களின் மனைவியரில் ஒருவரான) உம்மு ஸலமா (ரலி) அவர்களின் அடிமையாக இருந்து வந்தேன். ஒரு தடவை உம்மு ஸலமா (ரலி) அவர்கள் என்னிடம், “நீ வாழும் வரை நபி (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின்படி உன்னை உரிமை விடுகிறேன்” என்று கூறினார்கள்.
அதற்கு, “நீங்கள் இந்த நிபந்தனையை கூறாவிட்டாலும் நான் வாழும் வரை நபி (ஸல்) அவர்களை விட்டு பிரியமாட்டேன்” என்று கூறினேன். அவர்கள் அந்த நிபந்தனையை கூறியே என்னை உரிமை விட்டார்கள்.