🔗

அபூதாவூத்: 4010

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

دَخَلَ نِسْوَةٌ مِنْ أَهْلِ الشَّامِ عَلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، فَقَالَتْ: مِمَّنْ أَنْتُنَّ قُلْنَ مِنْ أَهْلِ الشَّامِ قَالَتْ: لَعَلَّكُنَّ مِنَ الْكُورَةِ الَّتِي تَدْخُلُ نِسَاؤُهَا الْحَمَّامَاتِ قُلْنَ: نَعَمْ قَالَتْ: أَمَا إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنَ امْرَأَةٍ تَخْلَعُ ثِيَابَهَا فِي غَيْرِ بَيْتِهَا إِلَّا هَتَكَتْ، مَا بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ تَعَالَى»


4010. அபுல்மலீஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஷாம் (எனும் சிரியா) நாட்டைச் சேர்ந்த சில பெண்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்தனர். அப்போது ஆயிஷா (ரலி), “நீங்கள் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “நாங்கள் ஷாம் நாட்டினர்” என்று பதிலளித்தனர்.

அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “உங்கள் ஊரில் பெண்கள் பொதுக் குளிப்பிடங்களுக்கு செல்கின்றார்கள் தானே?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “ஆம்” என்று கூறினர். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “அறிந்து கொள்ளுங்கள்! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இவ்வாறு கூற செவியுற்றிருக்கிறேன்:

தனது வீட்டைத் தவிர வேறு இடத்தில் தனது ஆடையைக் களையும் எந்தப் பெண்ணும் அவளுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையிலான திரையைக் கிழித்துவிட்டாள் (அதாவது வெட்கத்தைக் கைவிட்டுவிட்டாள்).


அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

இது ஜரீர் பின் அப்துல்ஹமீத் அவர்கள் அறிவிக்கும் ஹதீஸாகும். இதுவே முழுமையானது.

ஜரீர் அவர்கள் அபுல்மலீஹ் அவர்களைக் குறிப்பிடவில்லை. (மாறாக மன்ஸூர் —> ஸாலிம் பின் அபுல்ஜஃத் —> ஆயிஷா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில்) “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்றே குறிப்பிட்டுள்ளார்.