🔗

அபூதாவூத்: 4082

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَهْطٍ مِنْ مُزَيْنَةَ، فَبَايَعْنَاهُ، وَإِنَّ قَمِيصَهُ لَمُطْلَقُ الْأَزْرَارِ»، قَالَ: «فَبَايَعْتُهُ ثُمَّ أَدْخَلْتُ يَدَيَّ فِي جَيْبِ قَمِيصِهِ، فَمَسِسْتُ الْخَاتَمَ»

قَالَ عُرْوَةُ: «فَمَا رَأَيْتُ مُعَاوِيَةَ وَلَا ابْنَهُ قَطُّ، إِلَّا مُطْلِقَيْ أَزْرَارِهِمَا فِي شِتَاءٍ وَلَا حَرٍّ، وَلَا يُزَرِّرَانِ أَزْرَارَهُمَا أَبَدًا»


பாடம்:

சட்டைப் பித்தான்களை மாட்டாமலிருப்பது.

4082. நான், எனது முஸைனா கூட்டத்தாருடன் சேர்ந்து வந்து (அனைவரும்) நபி (ஸல்) அவர்களிடம் பைஅத் எனும் உறுதிமொழி அளித்தோம். அப்போது நபி (ஸல்) அவர்களின் சட்டைப் பித்தான்கள் திறந்திருந்தன.

நான் பைஅத் செய்யும் போது நபி (ஸல்) அவர்களின் சட்டைப் பையில் கையை விட்டு நபித்துவ முத்திரையை தடவிப் பார்த்தேன்.

அறிவிப்பவர்: குர்ரா பின் இயாஸ் (ரலி)

உர்வா பின் அப்துல்லாஹ் (ரஹ்) கூறுகிறார்:

முஆவியா பின் குர்ரா (ரஹ்) அவர்களும், அவரின் மகனும் குளிர்காலமாக இருந்தாலும் வெயில் காலமாக இருந்தாலும் சட்டைப் பித்தான்களை திறந்தே விட்டிருப்பதை நான் பார்த்துள்ளேன். எப்போதும், அவர்கள் சட்டைப் பித்தான்களை மாட்டுவதில்லை.