🔗

அபூதாவூத்: 42

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

بَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَامَ عُمَرُ خَلْفَهُ بِكُوزٍ مِنْ مَاءٍ، فَقَالَ: «مَا هَذَا يَا عُمَرُ»، فَقَالَ: هَذَا مَاءٌ تَتَوَضَّأُ بِهِ، قَالَ: «مَا أُمِرْتُ كُلَّمَا بُلْتُ أَنْ أَتَوَضَّأَ، وَلَوْ فَعَلْتُ لَكَانَتْ سُنَّةً»


பாடம் : 22

சிறுநீர் கழித்த பின் நன்கு சுத்தம் செய்தல்.

42. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்தார்கள். அப்போது அவர்களுக்குப் ‎பின்னால் தண்ணீர் கூஜாவுடன் உமர்(ரலி) அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். ‎உமரே ! இது என்ன என்று நபி (ஸல்) அவர்கள் வினவியதும் தாங்கள் உலூச் ‎செய்வதற்கான தண்ணீர் என்று உமர் (ரலி) கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‎நான் சிறுநீர் கழிக்கும் போதெல்லாம் உலூச் செய்யும் படி கட்டளையிடப் படவில்லை. ‎அவ்வாறு நான் செய்தால் அது சுன்னத்தாக (வழிமுறையாக) ஆகிவிடும் என்று ‎சொன்னார்கள்.‎

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)‎

‎(குறிப்பு: இப்னு மாஜாவிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)‎