🔗

அபூதாவூத்: 4207

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

فِي هَذَا الْخَبَرِ، قَالَ: فَقَالَ لَهُ أَبِي: أَرِنِي هَذَا الَّذِي بِظَهْرِكَ، فَإِنِّي رَجُلٌ طَبِيبٌ، قَالَ: «اللَّهُ الطَّبِيبُ، بَلْ أَنْتَ رَجُلٌ رَفِيقٌ، طَبِيبُهَا الَّذِي خَلَقَهَا»


4207. ஹதீஸ் எண்-4206 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் சிறிது கூடுதலாக வந்துள்ளது. அதன் விவரம்:

அப்போது என் தந்தை, ‘உங்கள் முதுகில் உள்ளதை எனக்குக் காட்டுங்கள். நான் ஒரு மருத்துவன். (அதற்கு மருத்துவம் செய்கிறேன்)’ என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வே மருத்துவன் (உண்மையில் குணப்படுத்துபவன்). மாறாக, நீர் ஒரு இரக்க குணமுள்ளவர். அதைப் படைத்தவனே அதற்கு மருத்துவன் ஆவான்” என்று கூறினார்கள்.