«لَوْ لَمْ يَبْقَ مِنَ الدُّنْيَا إِلَّا يَوْمٌ» – قَالَ زَائِدَةُ فِي حَدِيثِهِ: «لَطَوَّلَ اللَّهُ ذَلِكَ الْيَوْمَ»، ثُمَّ اتَّفَقُوا – «حَتَّى يَبْعَثَ فِيهِ رَجُلًا مِنِّي» – أَوْ «مِنْ أَهْلِ بَيْتِي» – يُوَاطِئُ اسْمُهُ اسْمِي، وَاسْمُ أَبِيهِ اسْمُ أَبِي “
زَادَ فِي حَدِيثِ فِطْرٍ: «يَمْلَأُ الْأَرْضَ قِسْطًا، وَعَدْلًا كَمَا مُلِئَتْ ظُلْمًا وَجَوْرًا»
وَقَالَ: فِي حَدِيثِ سُفْيَانَ: «لَا تَذْهَبُ، أَوْ لَا تَنْقَضِي، الدُّنْيَا حَتَّى يَمْلِكَ الْعَرَبَ رَجُلٌ مِنْ أَهْلِ بَيْتِي، يُوَاطِئُ اسْمُهُ اسْمِي»
4282. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“உலகம் முடிவதற்கு ஒரு நாள் மட்டுமே எஞ்சியிருந்தாலும், அல்லாஹ் அந்த நாளை நீளமாக்கி, என் குடும்பத்தைச் சார்ந்த ஒரு மனிதரை அதில் அனுப்புவான். அவரது பெயர் என் பெயருடனும், அவரது தந்தையின் பெயர் என் தந்தையின் பெயருடனும் ஒத்துப்போகும். அவர் (இதற்கு முன்பு) பூமி அநியாயத்தாலும், அக்கிரமத்தாலும் நிரப்பப்பட்டிருந்ததைப் போன்று அப்போது அதை நீதியாலும், நேர்மையாலும் நிரப்புவார்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
ஸுஃப்யான் ஸவ்ரீ (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், “என் குடும்பத்தைச் சார்ந்த; என் பெயருடன் அவரின் பெயர் ஒத்துப்போகும் ஒரு மனிதர் அரேபியாவின் ஆட்சியைக் கைப்பற்றும் வரை உலகம் அழியாது” என்று இடம்பெற்றுள்ளது.