«يَكُونُ اخْتِلَافٌ عِنْدَ مَوْتِ خَلِيفَةٍ، فَيَخْرُجُ رَجُلٌ مِنْ أَهْلِ الْمَدِينَةِ هَارِبًا إِلَى مَكَّةَ، فَيَأْتِيهِ نَاسٌ مِنْ أَهْلِ مَكَّةَ فَيُخْرِجُونَهُ وَهُوَ كَارِهٌ، فَيُبَايِعُونَهُ بَيْنَ الرُّكْنِ وَالْمَقَامِ، وَيُبْعَثُ إِلَيْهِ بَعْثٌ مِنْ أَهْلِ الشَّامِ، فَيُخْسَفُ بِهِمْ بِالْبَيْدَاءِ بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ، فَإِذَا رَأَى النَّاسُ ذَلِكَ أَتَاهُ أَبْدَالُ الشَّامِ، وَعَصَائِبُ أَهْلِ الْعِرَاقِ، فَيُبَايِعُونَهُ بَيْنَ الرُّكْنِ وَالْمَقَامِ، ثُمَّ يَنْشَأُ رَجُلٌ مِنْ قُرَيْشٍ أَخْوَالُهُ كَلْبٌ، فَيَبْعَثُ إِلَيْهِمْ بَعْثًا، فَيَظْهَرُونَ عَلَيْهِمْ، وَذَلِكَ بَعْثُ كَلْبٍ، وَالْخَيْبَةُ لِمَنْ لَمْ يَشْهَدْ غَنِيمَةَ كَلْبٍ، فَيَقْسِمُ الْمَالَ، وَيَعْمَلُ فِي النَّاسِ بِسُنَّةِ نَبِيِّهِمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَيُلْقِي الْإِسْلَامُ بِجِرَانِهِ فِي الْأَرْضِ، فَيَلْبَثُ سَبْعَ سِنِينَ، ثُمَّ يُتَوَفَّى وَيُصَلِّي عَلَيْهِ الْمُسْلِمُونَ»
قَالَ أَبُو دَاوُدَ: قَالَ بَعْضُهُمْ عَنْ هِشَامٍ: «تِسْعَ سِنِينَ»، وَقَالَ بَعْضُهُمْ: «سَبْعَ سِنِينَ»
4286. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு ஆட்சியாளர் மரணித்து கருத்துவேறுபாடு ஏற்படும். அப்போது மதீனாவைச் சேர்ந்த ஒரு மனிதர் (மஹ்தீ என்பவர்) மக்காவுக்கு வெருண்டோடுவார். மக்காவாசிகளில் சிலர் அவர் விரும்பாத நிலையிலும் அவரை கஅபாவிற்கு இழுத்துக் கொண்டுவந்து ருக்னு, மகாம் இப்ராஹீமுக்கு இடையில் அவரிடம் ஆட்சிபிரமாணம் (பைஅத்) செய்வார்கள்.
இவருக்கு எதிராக சிரியாவிலிருந்து ஒரு படை அனுப்பப்படும். என்றாலும் அது மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையே உள்ள சமவெளியில் புதையுண்டுபோய்விடும். இதை மக்கள் கண்டபிறகு சிரியா மற்றும் ஈராக்கிலுள்ள நல்ல மனிதர்களும் ருக்னு, மகாம் இப்ராஹீமுக்கு இடையில் அவரிடம் ஆட்சிபிரமாணம் (பைஅத்) செய்வார்கள்.
பிறகு குறைஷிக் குலத்திலிருந்து ஒருவர் அவருக்கு எதிராக கிளம்புவார். அவரின் தாய்வழி மாமன்கள் கல்ப் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். (அவருக்கு உதவியாக கல்ப் கூட்டத்தாரைச் சேர்ந்த அவரின் தாய்வழி மாமன்கள் இருப்பார்கள்). இவர் மஹ்தீ என்பவருக்கு எதிராக (கல்ப் கூட்டத்தாரின்) படையை அனுப்புவார். இந்தக் கல்ப் கூட்டத்தாரின் படையை மஹ்தீ தோல்வியுறச் செய்து அவர்களின் சொத்துக்களை போர்ச் செல்வங்களாக பெறுவார். அவற்றை மக்களுக்கு பங்கிடுவார். அந்தப் பங்கில் கலந்துக் கொள்ளாதவர்கள் நட்டவாளிகளே!.
பிறகு, அவர் உலகம் முழுவதும் இஸ்லாத்தை நிலைநாட்டியும், நபியின் வழிமுறைப்படியும் 7 வருடங்கள் ஆட்சிச் செய்வார். பிறகு அவர் மரணித்துவிட அவருக்கு முஸ்லிம்கள் ஜனாஸாத் தொழுகை நடத்தி அடக்கம் செய்வார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
ஹிஷாம் அவர்களிடமிருந்து அறிவிக்கும் சிலர், “மஹ்தீ என்பவரின் ஆட்சிக் காலம் 9 வருடம் என்றும்; வேறு சிலர் 7 வருடம்” என்றும் அறிவித்துள்ளனர்.