🔗

அபூதாவூத்: 429

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

خَمْسٌ مَنْ جَاءَ بِهِنَّ مَعَ إِيمَانٍ دَخَلَ الْجَنَّةَ: مَنْ حَافَظَ عَلَى الصَّلَوَاتِ الْخَمْسِ عَلَى وُضُوئِهِنَّ وَرُكُوعِهِنَّ وَسُجُودِهِنَّ وَمَوَاقِيتِهِنَّ، وَصَامَ رَمَضَانَ، وَحَجَّ الْبَيْتَ إِنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا، وَأَعْطَى الزَّكَاةَ طَيِّبَةً بِهَا نَفْسُهُ، وَأَدَّى الْأَمَانَةَ ” قَالُوا: يَا أَبَا الدَّرْدَاءِ، وَمَا أَدَاءُ الْأَمَانَةِ قَالَ: «الْغُسْلُ مِنَ الْجَنَابَةِ»


429. தொழுகையின் உலூ, ருகூஃ, சுஜுது நேரங்கள் ஆகியவற்றை பேணி ஐந்து தொழுகைகளை முறையாக நிறைவேற்றுதல், ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது பயணத்திற்கு சக்தியுள்ளவர் ஹஜ் செய்தல், ஜகாத்தை மனதிருப்தியுடன் கொடுத்தல், அமானிதத்தை நிறைவேற்றல் ஆகிய இந்த செயல்களை யார் ஈமானுடன் செய்கின்றாரோ அவர் சுவனம் சென்றவராவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூதர்தா (ரலி) அறிவிக்கின்றார். அபூதர்தாவே! அமானிதத்தை நிறை வேற்றல் என்றால் என்ன? என்று மக்கள் கேட்டதற்கு ஜனாபத்தை நீக்குவதற்காக குளித்தல் என்று பதிலளித்தார்.