«إِنَّ اللَّهَ قَبَضَ أَرْوَاحَكُمْ حَيْثُ شَاءَ وَرَدَّهَا حَيْثُ شَاءَ قُمْ فَأَذِّنْ بِالصَّلَاةِ» فَقَامُوا فَتَطَهَّرُوا، حَتَّى إِذَا ارْتَفَعَتِ الشَّمْسُ قَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى بِالنَّاسِ
439. அல்லாஹ் அவன் விரும்பும் போது உங்கள் உயிர்களை கைப்பற்றி விடுகின்றான். அவன் விரும்பும் போது அவ்வுயிர்களை திரும்ப அனுப்பி விடுகின்றான். (பிலாலே) எழுந்து அதான் சொல்வீராக! என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதும் நபித் தோழர்கள் எழுந்து உலூச் செய்தனர். சூரியன் உயர்ந்ததும் நபி (ஸல்) அவர்கள் தொழ நின்று எங்களுக்கு தொழுவித்தார்கள் என்று மேலுள்ள ஹதீஸை அபூகதாதாவிடமிருந்து அவரது மகன் அறிவிக்கின்றார்.