«مَنْ نَسِيَ صَلَاةً فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا، لَا كَفَّارَةَ لَهَا إِلَّا ذَلِكَ»
442. யார் தொழுகையை மறந்து விடுகின்றாரோ அது நினைவுக்கு வந்ததும் தொழுது விடுவாராக! இதை தவிர தொழுகையை மறந்ததற்கு வேறு எந்த பரிகாரமும் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கின்றார்.
(குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், நஸயீ, இப்னு மாஜா ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது.)