«إِنَّ الْحَصَاةَ لَتُنَاشِدُ الَّذِي يُخْرِجُهَا مِنَ الْمَسْجِدِ»
460. சரனைக் கற்கள் பள்ளியிலிருந்து வெளியே எடுத்துச் செல்பவரிடம் (தங்களை வெளியே எடுத்துச் செல்ல வேண்டாம் என) முறையிடுகின்றன என அபூஹுரைரா (ரலி) கூறுகின்றார்கள். அபூபத்ர் என்ற இத்தொடரில் உள்ள ஓர் அறிவிப்பாளர் தனக்கு முந்திய அறிவிப்பாளர் இதை நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று மர்ஃபூ வாக அறிவித்தார் என்றே எனக்கு நினைவு உள்ளது.