«لَوْ تَرَكْنَا هَذَا الْبَابَ لِلنِّسَاءِ»، قَالَ نَافِعٌ: فَلَمْ يَدْخُلْ مِنْهُ ابْنُ عُمَرَ، حَتَّى مَاتَ،
وَقَالَ غَيْرُ عَبْدِ الْوَارِثِ: قَالَ عُمَرُ: وَهُوَ أَصَحُّ
பாடம் : 160
ஆண்களுடன் பெண்கள் பள்ளிகளில் ஒன்று சேராதிருத்தல்.
462. இந்த வாசலை பெண்களுக்காக ஒதுக்கிவிட்டால் (நல்லது தானே) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
அந்த வாசல் வழியாக மரணமாகும் வரை இப்னு உமர் (ரலி) பள்ளிக்குள் நுழையவே இல்லை என நாபிஃ (ரஹ்) கூறினார்.
அபூதாவூத் கூறுகிறார்:
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல் வாரிஸ் என்பவரைத் தவிர மற்றவர்கள் உமர் (ரலி) கூறினார் என்று அறிவிக்கின்றனர். இதுதான் மிகச் சரியானதாகும்.