«لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي، لَأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ عِنْدَ كُلِّ صَلَاةٍ»، قَالَ أَبُو سَلَمَةَ: فَرَأَيْتُ زَيْدًا يَجْلِسُ فِي الْمَسْجِدِ، وَإِنَّ السِّوَاكَ مِنْ أُذُنِهِ مَوْضِعَ الْقَلَمِ مِنْ أُذُنِ الْكَاتِبِ، فَكُلَّمَا قَامَ إِلَى الصَّلَاةِ اسْتَاكَ
47. எனது சமுதாயத்தவர்களுக்கு நான் கஷ்டம் கொடுத்தவன் ஆவேன் என்றில் லாவிடில் ஒவ்வொரு தொழுகையின் போதும் பல் துலக்க வேண்டும் என்று நான் அவர்களுக்கு உத்திரவிட்டிருப்பேன் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவிமடுத்தேன் என்று ஸைது காலித் அல்ஜுஹனீ (ரலி) அறிவிக்கிறார்கள். இதன் காரணமாக எழுத்தாளனுடைய காதில் பேனா இடம் பெறுவது போல் ஸைது பின் காலித் (ரலி) அவர்கள் காதில் பற்குச்சி இடம் வகிக்கும் நிலையில் அவர்களைப் பள்ளியில் அமர்ந்திருக்கக் கண்டேன். அவர்கள் தொழத் தயாராகும் போதெல்லாம் பல் துலக்குவார்கள்.
அறிவிப்பவர் : அபூஸலமா (ரஹ்)
(குறிப்பு : இதை திர்மிதீ, நஸயீ, அஹ்மத் ஆகியோரும் பதிவு செய்துள்ளனர்.)