مَنْ سَمِعَ رَجُلًا يَنْشُدُ ضَالَّةً فِي الْمَسْجِدِ، فَلْيَقُلْ: لَا أَدَّاهَا اللَّهُ إِلَيْكَ فَإِنَّ الْمَسَاجِدَ لَمْ تُبْنَ لِهَذَا
பாடம் : 164
காணாமல் போன பொருளை அடையாளம் கூறி தேடுதல் கூடாது.
473. காணாமல் போன பொருளை தேடி பள்ளியில் சப்தமிடுவோரின் சப்தத்தை செவியுறும் ஒருவர் (அவரை நோக்கி) உனக்கு அல்லாஹ் அந்த பொருளை தரமாட்டானாக! என்று சொல்வாராக! ஏனெனில், நிச்சயமாக பள்ளிவாசல் இந்த நோக்கத்திற்காக கட்டப்படவில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்.
(குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிம், இப்னு மாஜா ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது.)