«أَنَا زَعِيمٌ بِبَيْتٍ فِي رَبَضِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْمِرَاءَ وَإِنْ كَانَ مُحِقًّا، وَبِبَيْتٍ فِي وَسَطِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْكَذِبَ وَإِنْ كَانَ مَازِحًا وَبِبَيْتٍ فِي أَعْلَى الْجَنَّةِ لِمَنْ حَسَّنَ خُلُقَهُ»
4800. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் தான் கூறுவது உண்மையாயினும் வீண் விவாதத்தைக் கைவிடுகிறாரோ, அவருக்கு சொர்க்கத்தின் ஓரத்திலே ஒரு வீடு கிடைக்க நான் பொறுப்பேற்கிறேன்.
யார் விளையாட்டிற்காகக் கூடப் பொய் பேசுவதைக் கைவிடுகிறாரோ, அவருக்குச் சொர்க்கத்தின் நடுவிலே ஒரு வீடு கிடைக்க நான் பொறுப்பேற்கிறேன்.
யார் தனது நற்பண்புகளை (அழகிய குணங்களை) மேம்படுத்திக் கொள்கிறாரோ, அவருக்குச் சொர்க்கத்தின் உயரிய பகுதியில் ஒரு வீடு கிடைக்க நான் பொறுப்பேற்கிறேன்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)