أَنَّ رَجُلًا لَعَنَ الرِّيحَ – وَقَالَ مُسْلِمٌ إِنَّ رَجُلًا نَازَعَتْهُ الرِّيحُ رِدَاءَهُ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَعَنَهَا -، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَلْعَنْهَا، فَإِنَّهَا مَأْمُورَةٌ، وَإِنَّهُ مَنْ لَعَنَ شَيْئًا لَيْسَ لَهُ بِأَهْلٍ رَجَعَتِ اللَّعْنَةُ عَلَيْهِ»
4908. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் இருந்து கொண்டு காற்றைச் சபித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “காற்றைச் சபிக்காதீர்கள்; ஏனெனில் அது (அல்லாஹ்வின் கட்டளைக்கு) பணிய வைக்கப்பட்டதாகும். மேலும், (சாபத்திற்கு) தகுதியில்லாத ஒன்றை யாராவது சபித்தால், அந்த சாபம் அவரிடமே திரும்பிவிடும்” என்று கூறினார்கள்.
இந்தச் செய்தி, முஸ்லிம் பின் இப்ராஹீம் அவர்களின் அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு மனிதருடைய மேலாடையைக் காற்று பறித்துச் சென்றது. அதனால் அவர் அதைச் சபித்தார்” என்று கூடுதலான வாக்கியத்துடன் இடம்பெற்றுள்ளது.
மேலும் இவரின் அறிவிப்பு அபான் பின் யஸீத் —> கதாதா —> அபுல்ஆலியா (ரஹ்) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் முர்ஸலாக வந்துள்ளது.