«لَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثٍ، فَمَنْ هَجَرَ فَوْقَ ثَلَاثٍ فَمَاتَ دَخَلَ النَّارَ»
4914. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம், தனது (முஸ்லிமான) சகோதரனுடன் மூன்று நாட்களுக்குமேல் (நட்பை முறித்து) பேசாமலிருப்பது ஆகுமானதல்ல.
ஒருவர் மூன்று நாட்களுக்குமேல் பேசாமலிருந்து அந்நிலையில் அவர் இறந்துவிட்டால் அவர் நரகத்துக்குச் செல்வார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)