«الْأَرْضُ كُلُّهَا مَسْجِدٌ إِلَّا الْحَمَّامَ وَالْمَقْبَرَةَ»
492. அறிவிப்பாளர் தொடர் :
1. அபூசயீத் ——–> அம்ர் பின் யஹ்யாவின் தந்தை ——–> அம்ர் பின் யஹ்யா ——–> அப்துல் வாஹித் ——–> முஸத்தத்
2. அபூசயீத் ——–> அம்ர் பின் யஹ்யாவின் தந்தை ——–> அம்ர் பின் யஹ்யா ——–> அப்துல் வாஹித் ——–> ஹம்மாத் ——–> மூஸா பின் இஸ்மாயில்
குளியலறை, மண்ணறை ஆகியவற்றைத் தவிர பூமி அனைத்தும் தொழுமிடம் தான் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என அபூசயீத் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு சொன்னதாகவே தான் கருதுகின்றேன் என்று அம்ர் பின் யஹ்யா அறிவிக்கின்றார் என மூஸா தனது அறிவிப்பில் கூறுகின்றார்.