أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَخَذَ مَضْجَعَهُ مِنَ اللَّيْلِ قَالَ: «بِسْمِ اللَّهِ وَضَعْتُ جَنْبِي اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي، وَأَخْسِئْ شَيْطَانِي، وَفُكَّ رِهَانِي، وَاجْعَلْنِي فِي النَّدِيِّ الْأَعْلَى»
5054. அபுல்அஸ்ஹர் அல்அன்மாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் தனது படுக்கைக்குச் சென்றால், “பிஸ்மில்லாஹி வளஃது ஜன்பீ, அல்லாஹும்மஃக்பிர்லீ தன்பீ, வ அக்ஸிஃ ஷைத்தானீ, வ ஃபுக்க ரிஹானீ, வஜ்அல்னீ ஃபின்னதிய்யில் அஃலா” என்று கூறுவார்கள்.
(பொருள்: அல்லாஹ்வின் பெயரால் என் விலாவைப் (படுக்கையில்) வைக்கிறேன். அல்லாஹ்வே! என் பாவத்தை மன்னிப்பாயாக! என் ஷைத்தானை இழிவுபடுத்தி விரட்டிவிடுவாயாக! என் பிணையிலிருந்து (என் உயிரைப் பற்றிக்கொண்டிருக்கும் பாவங்கள், கடன்கள், ஷைத்தானின் பிடி ஆகியவற்றிலிருந்து) என்னை விடுவிப்பாயாக! மேலும், என்னை மிக உயர்ந்த சபையில் சேர்ப்பாயாக!)
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
இந்தச் செய்தியை ஸவ்ர் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூஹம்மாம் அல்அஹ்வாஸீ அவர்கள் (நபித்தோழர் அபுல்அஸ்ஹர் அல்அன்மாரீ (ரலி) என்ற பெயருக்கு பதிலாக) அபூஸுஹைர் அல்அன்மாரீ (ரலி) என்று அறிவித்துள்ளார்.