🔗

அபூதாவூத்: 5058

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ إِذَا أَخَذَ مَضْجَعَهُ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَفَانِي وَآوَانِي، وَأَطْعَمَنِي وَسَقَانِي، وَالَّذِي مَنَّ عَلَيَّ فَأَفْضَلَ، وَالَّذِي أَعْطَانِي فَأَجْزَلَ، الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ اللَّهُمَّ رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ وَإِلَهَ كُلِّ شَيْءٍ، أَعُوذُ بِكَ مِنَ النَّارِ»


5058. இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்லும்போது, “அல்ஹம்து லில்லாஹில்லதீ கஃபானீ வ ஆவானீ, வ அத்அமனீ வ ஸகானீ, வல்லதீ மன்ன அலய்ய ஃப அஃப்ளல, வல்லதீ அஃதானீ ஃப அஜ்ஸல, அல்ஹம்து லில்லாஹி அலா குல்லி ஹால். அல்லாஹும்ம ரப்ப குல்லி ஷைஇவ், வ மலீகஹு வ இலாஹ குல்லி ஷைஇன். அஊது பிக மினன்னார்” என்று கூறுவார்கள்.

(பொருள்: எனக்குப் போதுமானவனாகவும், எனக்குப் புகலிடம் அளித்தவனுமான அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். எனக்கு உணவளித்து, எனக்கு நீர் புகட்டியவனுக்கே புகழனைத்தும். என் மீது பேரருள் புரிந்து, சிறப்புகளை வழங்கியவனுக்கும், எனக்கு வழங்கியதை அதிகப்படுத்தியவனுக்கே புகழனைத்தும். எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! அல்லாஹ்வே! எல்லாப் பொருட்களின் இறைவனே! அவற்றின் அதிபதியே! எல்லாப் பொருட்களின் வணக்கத்திற்குரியவனே! நரக நெருப்பை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.)