🔗

அபூதாவூத்: 5088

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

«مَنْ قَالَ بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ، فِي الْأَرْضِ، وَلَا فِي السَّمَاءِ، وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ، ثَلَاثَ مَرَّاتٍ، لَمْ تُصِبْهُ فَجْأَةُ بَلَاءٍ، حَتَّى يُصْبِحَ، وَمَنْ قَالَهَا حِينَ يُصْبِحُ ثَلَاثُ مَرَّاتٍ، لَمْ تُصِبْهُ فَجْأَةُ بَلَاءٍ حَتَّى يُمْسِيَ»،

وَقَالَ: فَأَصَابَ أَبَانَ بْنَ عُثْمَانَ، الْفَالِجُ، فَجَعَلَ الرَّجُلُ الَّذِي سَمِعَ مِنْهُ الْحَدِيثَ يَنْظُرُ إِلَيْهِ، فَقَالَ لَهُ: «مَا لَكَ تَنْظُرُ إِلَيَّ؟ فَوَاللَّهِ مَا كَذَبْتُ عَلَى عُثْمَانَ وَلَا كَذَبَ عُثْمَانُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَكِنَّ الْيَوْمَ الَّذِي أَصَابَنِي فِيهِ مَا أَصَابَنِي غَضِبْتُ فَنَسِيتُ أَنْ أَقُولَهَا»


5088. ஒருவர் மாலையில் “பிஸ்மில்லாஹில்லதீ லா யளுர்ரு மஅஸ்மிஹீ ஷைஉன் ஃபில்அர்ளி, வலா ஃபிஸ்ஸமாஇ, வஹுவஸ் ஸமீஉல் அலீம்” என்று மூன்று முறை கூறினால் அவருக்கு காலை வரை திடீர் துன்பம் ஏற்படாது. மேலும், இதை காலையில் மூன்று முறை கூறினால் அவருக்கு மாலை வரை திடீர் துன்பம் ஏற்படாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

(துஆவின் பொருள்: அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஆரம்பிக்கிறேன்). அவனுடைய பெயருடன் இருக்கும்போது வானத்திலோ, பூமியிலோ எந்தப் பொருளும் தீங்கு செய்யாது. மேலும், அவன் யாவற்றையும் செவியுறுபவன்; நன்கறிபவன்.)

அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)


இந்த ஹதீஸை அறிவித்த அபான் பின் உஸ்மான் (ரஹ்) அவர்களுக்கு ஒருமுறை பக்கவாதம் ஏற்பட்டது. இந்த ஹதீஸை அவரிடமிருந்து செவியுற்ற ஒருவர் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார். உடனே அபான் (ரஹ்) அவர்கள், “ஏன் என்னைப் பார்க்கிறீர்? அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் உஸ்மான் (ரலி) அவர்கள் மீது பொய் சொல்லவில்லை. உஸ்மான் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்கள் மீது பொய் சொல்லவில்லை. எனக்கு பக்கவாதம் ஏற்பட்ட அன்று நான் கோபமாக இருந்ததால் இதை ஓத மறந்துவிட்டேன்” என்று கூறினார்.