إِذَا خَرَجَ الرَّجُلُ مِنْ بَيْتِهِ فَقَالَ بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، قَالَ: يُقَالُ حِينَئِذٍ: هُدِيتَ، وَكُفِيتَ، وَوُقِيتَ، فَتَتَنَحَّى لَهُ الشَّيَاطِينُ، فَيَقُولُ لَهُ شَيْطَانٌ آخَرُ: كَيْفَ لَكَ بِرَجُلٍ قَدْ هُدِيَ وَكُفِيَ وَوُقِيَ؟
5095. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் தனது வீட்டை விட்டு வெளியேறும் போது, “பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி, லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்…
(பொருள்: அல்லாஹ்வின் பெயரால் வெளியேறுகிறேன். அவனையே நான் சார்ந்துள்ளேன். அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகவோ, நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் இயலாது)
என்று கூறினால், “நீ நேர்வழிகாட்டப்பட்டாய்! பொறுப்பேற்கப்பட்டாய்! பாதுகாக்கப்பட்டாய்! என்று அவருக்கு கூறப்படும். மேலும் ஷைத்தான் அவரை விட்டு வெகுதூரத்தில் சென்று விடுவான். அந்த ஷைத்தானிடம் மற்றொரு ஷைத்தான், நேர்வழிகாட்டப்பட்ட, பொறுப்பேற்கப்பட்ட, பாதுகாக்கப்பட்ட மனிதரின் மீது உனக்கு எப்படி ஆதிக்கம் இருக்கும்? என்று கூறுவான்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)