إِنَّمَا كَانَ الْأَذَانُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّتَيْنِ، مَرَّتَيْنِ وَالْإِقَامَةُ مَرَّةً، مَرَّةً غَيْرَ أَنَّهُ، يَقُولُ: قَدْ قَامَتِ الصَّلَاةُ، قَدْ قَامَتِ الصَّلَاةُ، فَإِذَا سَمِعْنَا الْإِقَامَةَ تَوَضَّأْنَا، ثُمَّ خَرَجْنَا إِلَى الصَّلَاةِ “، قَالَ شُعْبَةُ: لَمْ أَسْمَعْ مِنْ أَبِي جَعْفَرٍ غَيْرَ هَذَا الْحَدِيثِ
510. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் பாங்கின் வார்த்தைகள் இரண்டு இரண்டு தடவையாகவும், இகாமத் வார்த்தைகள் ஒரு தடவையாகவும் அமைந்து இருந்தன. ஆனால் கத் காமதிஸ் ஸலாஹ், கத் காமதிஸ் ஸலாஹ் என இரு தடவை (தொழுகைஅழைப்பாளர்) சொல்வார்.
இகாமத்தை செவியுற்றதும் நாங்கள் உளூச் செய்து பிறகு பள்ளிக்கு புறப்படுவோம் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஸ்லிம் பின் மிஹ்ரான் (ரஹ்)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்:
அபூஜஅஃபர்-முஹம்மத் பின் இப்ராஹீம் பின் முஸ்லிம் அவர்களிடமிருந்து இந்த ஒரு ஹதீஸைத் தவிர வேறெதையும் நான் செவியுறவில்லை.