🔗

அபூதாவூத்: 5141

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِنَّ مِنْ أَكْبَرِ الْكَبَائِرِ أَنْ يَلْعَنَ الرَّجُلُ وَالِدَيْهِ» قِيلَ: يَا رَسُولَ اللَّهِ كَيْفَ يَلْعَنُ الرَّجُلُ وَالِدَيْهِ؟، قَالَ: «يَلْعَنُ أَبَا الرَّجُلِ، فَيَلْعَنُ أَبَاهُ، وَيَلْعَنُ أُمَّهُ، فَيَلْعَنُ أُمَّهُ»


5141. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“பெரும் பாவங்களில் மிகப்பெரும் பாவம் ஒரு மனிதர் தம் பெற்றோரை சாபமிடுவதாகும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது “அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் தம் பெற்றோரையே எப்படி சாபமிடுவார்?” என்று கேட்கப்பட்டது.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒருவர் இன்னொருவரின் தந்தையை சாபமிடுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையை சாபமிடுவார். ஒருவர் இன்னொருவரின் தாயை சாபமிடுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தாயை சாபமிடுவார். (ஆக, தம் பெற்றோர் சாபமிடப்படுவதற்கு இவரே காரணமாகிவிடுகிறார்)” என்று கூறினார்கள்.