أَنَّ امْرَأَةً كَانَتْ تَخْتِنُ بِالْمَدِينَةِ فَقَالَ لَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَنْهِكِي فَإِنَّ ذَلِكَ أَحْظَى لِلْمَرْأَةِ، وَأَحَبُّ إِلَى الْبَعْلِ»
பாடம்:
(கத்னா எனும்) விருத்தசேதனம் பற்றி வந்துள்ளவை.
5271. உம்மு அதிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மதீனா நகரத்தில் இருந்த ஒரு பெண்மனி, பெண்களுக்கு (கத்னா எனும்) விருத்தசேதனம் செய்பவராக இருந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “ஒட்ட நறுக்கி விடாதே! (மேலோட்டமாக நறுக்குவாயாக!); இதுவே பெண்ணுக்கும் நல்லது; அவளின் (வருங்கால) கணவனுக்கும் பிடித்தமானது” என்று கூறினார்கள்.
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
இந்தச் செய்தி உபைதுல்லாஹ் பின் அம்ர் —> அப்துல்மலிக் என்ற அறிவிப்பாளர்தொடரிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பலமான செய்தியல்ல. இது முர்ஸலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(மேற்கண்ட செய்தியில் இடம்பெறும்) முஹம்மது பின் ஹஸ்ஸான் என்பவர் யாரென்று அறியப்படாதவர் ஆவார். எனவே இந்தச் செய்தி பலவீனமானதாகும்.