🔗

அபூதாவூத்: 536

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

كُنَّا مَعَ أَبِي هُرَيْرَةَ فِي الْمَسْجِدِ فَخَرَجَ رَجُلٌ حِينَ أَذَّنَ الْمُؤَذِّنُ لِلْعَصْرِ، فَقَالَ أَبُو هُرَيْرَةَ: «أَمَّا هَذَا فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


பாடம் : 186

பாங்கு சொன்ன பிறகு பள்ளியிலிருந்து வெளியேறுதல்.

536. நாங்கள் அபூஹுரைரா (ரலி) யுடன் பள்ளிவாசலில் இருந்து கொண்டிருந்தோம். முஅத்தின் அவர் தொழுகைக்காக அதான் சொல்லிக் கொண்டிருந்த போது ஒருவர் வெளியே சென்றார். அப்போது அபூஹுரைரா (ரலி) இவர் அபுல் காஸிமி(ன் வழிமுறை)க்கு மாறு செய்து விட்டார் என்று சொன்னார்கள்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிம், திர்மிதீ, நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெறுகின்றது.)