🔗

அபூதாவூத்: 544

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«أُقِيمَتِ الصَّلَاةُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَجِيٌّ فِي جَانِبِ الْمَسْجِدِ، فَمَا قَامَ إِلَى الصَّلَاةِ حَتَّى نَامَ الْقَوْمُ»


544. தொழுகைக்கு இகாமத் சொல்லப் பட்டது. பள்ளியின் ஓரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரையாடிக் கொண்டிருந்தார்கள். மக்கள் தூங்கும் வரை அவர்கள் தொழுவிக்கவில்லை என அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், நஸயீ ஆகிய நுல்களில் இடம் பெறுகின்றது.)