🔗

அபூதாவூத்: 552

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَنَّهُ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي رَجُلٌ ضَرِيرُ الْبَصَرِ شَاسِعُ الدَّارِ، وَلِي قَائِدٌ لَا يُلَائِمُنِي فَهَلْ لِي رُخْصَةٌ أَنْ أُصَلِّيَ فِي بَيْتِي؟، قَالَ: «هَلْ تَسْمَعُ النِّدَاءَ»، قَالَ: نَعَمْ، قَالَ: «لَا أَجِدُ لَكَ رُخْصَةً»


552. அல்லாஹ்வின் தூதரே! நான் பார்வை குருடானவன்! வீடும் தூரமானவன்! எனக்கு ஒரு வழிகாட்டியும் உண்டு. ஆனால் அவர் எனக்கு ஒத்துழைக்கமாட்டார். எனவே நான் எனது வீட்டில் தொழ அனுமதி உண்டா? என்று அப்துல்லாஹ் பின் உம்மு மக்தூம் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது, பாங்கு சப்தத்தை செவியுறுகின்றாயா? என்று திருப்பிக் கேட்டார்கள். அதற்கு ஆம் என்றதும் அப்படியானால் உனக்கு நான் அனுமதி வழங்க முடியாது என்று பதில் சொன்னார்கள்.