🔗

அபூதாவூத்: 588

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

لَمَّا قَدِمَ الْمُهَاجِرُونَ الْأَوَّلُونَ نَزَلُوا الْعُصْبَةَ، قَبْلَ مَقْدَمِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكَانَ يَؤُمُّهُمْ سَالِمٌ مَوْلَى أَبِي حُذَيْفَةَ «وَكَانَ أَكْثَرَهُمْ قُرْآنًا»، زَادَ الْهَيْثَمُ: وَفِيهِمْ عُمَرُ بْنُ الْخَطَّابِ، وَأَبُوسَلَمَةَ بْنُ عَبْدِ الْأَسَدِ


588. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்படும் முன்பு நாடு துறந்த முதல் முஹாஜிர்கள் (நாடு துறந்தவர்கள்) “அஸ்பா” என்ற இடத்தில் குடியமர்ந்தார்கள். அபூஹுதைபா (ரலி)யின் விடுதலை பெற்ற அடிமை ஸாலிம் அவர்களுக்கு தொழுவித்தனர். அவரே அம்மக்களில் குர்ஆனை அதிகம் தெரிந்தவராவார் என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள். உமர் பின் அல்கத்தாப், அபூஸலமா பின் அப்துல்அ1த் ஆகியோரும் அந்த முஹாஜிர்களில் இடம்பெற்றிருந்தனர் என்று ஹைதம் கூடுதலாக அறிவிக்கின்றார்.