سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمَاءِ وَمَا يَنُوبُهُ مِنَ الدَّوَابِّ وَالسِّبَاعِ، فَقَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا كَانَ الْمَاءُ قُلَّتَيْنِ لَمْ يَحْمِلِ الْخَبَثَ»
பாடம்: 33
தண்ணீரை அசுத்தமாக்குபவை.
63. நபி (ஸல்) அவர்களிடம் கால் நடைகள், வனவிலங்குகள் (அடிக்கடி) வந்து (குடித்துவிட்டு மீதம்வைத்துவிட்டு) செல்லும் தண்ணீரை பற்றி கேட்டபோது, அதற்கு நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் இரண்டு குல்லத்களை அடைந்து விட்டால் அசுத்தங்களால் அது பாதிப்படையாது என்று பதில் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
இது முஹம்மது பின் அலா அறிவிக்கும் வார்த்தையாகும்.
உஸ்மான் பின் அபூஷைபா, ஹஸன் பின் அலீ ஆகியோர், முஹம்மத் பின் அப்பாத் பின் ஜஃபர் அவர்களிடமிருந்து அறிவிக்கின்றனர். இதுதான் சரியானதாகும்…