🔗

அபூதாவூத்: 68

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

اغْتَسَلَ بَعْضُ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَفْنَةٍ، فَجَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَتَوَضَّأَ مِنْهَا أَوْ يَغْتَسِلَ، فَقَالَتْ: لَهُ يَا رَسُولَ اللَّهِ، إِنِّي كُنْتُ جُنُبًا؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْمَاءَ لَا يُجْنِبُ»


பாடம் : 35

தண்ணீர் தீட்டாகாது.

68. நபி (ஸல்) அவர்கள் மனைவியரில் ஒருவர், வாய் அகன்ற பாத்திரத்தில் குளித்தார்கள். ‎அப்போது நபி (ஸல்) அவர்கள் உலூச் செய்வதற்காக, அல்லது குளிப்பதற்காக வந்த ‎போது அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் குளிப்பு கடமை யானவளாக இருந்தேன் ‎என்று அவர்கள் கூற தண்ணீர் தண்ணீரை தீட்டாக்கி விடாது என்று நபி (ஸல்) அவர்கள் ‎பதில் கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.‎

‎(குறிப்பு: திர்மிதீ, இப்னுமாஜா, தாரமி, ஹாகிம், ரஸீன், அஹ்மத், நஸயீ ஆகிய ‎நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)‎