🔗

அபூதாவூத்: 73

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«إِذَا وَلَغَ الْكَلْبُ فِي الْإِنَاءِ، فَاغْسِلُوهُ سَبْعَ مَرَّاتٍ، السَّابِعَةُ بِالتُّرَابِ»


73. பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் அதை ஏழு முறை கழுவுங்கள். ஏழாவது ‎தடவை மண்ணைப் பயன் படுத்திக் கழுவுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ‎அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.‎

அபூஹுரைரா (ரலி) அவர் களிடமிருந்து அபூஸாலிஹ், அபூரஸீன், அல் அ1ரஜ், சாபித் ‎அல் அஹ்னப், ஹம்மாம் பின் முனப்பஹ், அபூஸ்ஸீத்தி அப்துர் ரஹ்மான் ஆகியோர் ‎இதை அறிவிக்கும் போது மண்ணை பயன் படுத்துவது பற்றி குறிப்பிடவில்லை என ‎இமாம் அபூதாவூத் கூறுகின்றார்கள்.‎

‎(குறிப்பு: திர்மிதீயிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)‎