كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ كَبَّرَ، ثُمَّ يَقُولُ: «سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ، وَتَعَالَى جَدُّكَ، وَلَا إِلَهَ غَيْرَكَ»، ثُمَّ يَقُولُ: «لَا إِلَهَ إِلَّا اللَّهُ» ثَلَاثًا، ثُمَّ يَقُولُ: «اللَّهُ أَكْبَرُ كَبِيرًا» ثَلَاثًا، «أَعُوذُ بِاللَّهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ مِنْ هَمْزِهِ، وَنَفْخِهِ، وَنَفْثِهِ»، ثُمَّ يَقْرَأُ،
பாடம்:
ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக எனத் துவங்கும் துஆவை தொழுகையின் ஆரம்ப துஆவாக கருதக்கூடியவர்கள்.
775. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் தொழ நின்றால் அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கூறிய பின், “ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக, வ தபாரகஸ்முக, வ தஆலா ஜத்துக வலா இலாஹ ஃகைருக” என ஓதுவார்கள்.
(பொருள்: இறைவா நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். உன் பெயர் பாக்கியமானது. உன் வல்லமை உயர்ந்துள்ளது. உன்னைத் தவிர வணக்கத்துக்கு உரியவன் யாருமில்லை)
பிறகு, “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று மூன்று தடவையும், “அல்லாஹு அக்பர், கபீரா” என்று மூன்று தடவையும் கூறுவார்கள். பிறகு, “அஊது பில்லாஹிஸ் ஸமீஇல் அலீமி மினஷ் ஷைத்தானிர்ரஜீம், மின் ஹம்ஸிஹீ, வ நஃப்கிஹீ, வ நஃப்ஸிஹீ”என்று கூறி குர்ஆன் வசனங்களை ஓதுவார்கள்.
(பொருள்: விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும், அவனின் ஊசலாட்டத்தை விட்டும், அவன் வழிகெடுக்கும் பெருமையை விட்டும், கவிதையை விட்டும் யாவற்றையும் செவியேற்பவனும், அறிந்தவனுமான அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத்தேடுகிறேன்.) …
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
சில அறிஞர்கள் இந்தச் செய்தி, அலீ பின் அலீ —> ஹஸன் பஸரீ (ரஹ்) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் முர்ஸலாக வந்திருப்பதே உண்மையாகும் என்று கூறியுள்ளனர். எனவே மேற்கண்ட செய்தியை மவ்ஸூலாக அறிவித்திருப்பது ஜஃபர் பின் ஸுலைமான் அவர்களின் தவறாகும்.