«إِنَّمَا أَنَا لَكُمْ بِمَنْزِلَةِ الْوَالِدِ، أُعَلِّمُكُمْ فَإِذَا أَتَى أَحَدُكُمُ الْغَائِطَ فَلَا يَسْتَقْبِلِ الْقِبْلَةَ، وَلَا يَسْتَدْبِرْهَا وَلَا يَسْتَطِبْ بِيَمِينِهِ، وَكَانَ يَأْمُرُ بِثَلَاثَةِ أَحْجَارٍ، وَيَنْهَى عَنِ الرَّوْثِ وَالرِّمَّةِ»
8. உங்களுக்கு (மார்க்க நெறிகளை) கற்றுத் தருகின்ற தந்தையின் தரத்தில் உள்ளவன்தான் நான்! எனவே உங்களில் ஒருவர் மலம் (ஜலம்) கழிக்க சென்றால் அவர் கிப்லாவை முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ அமர வேண்டாம்; தன் வலது கரத்தினால் தூய்மை செய்ய வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மேலும் அவர்கள் எங்களுக்கு (துடைத்து சுத்தம் செய்யும் போது குறைந்தது) மூன்று கற்களை பயன்படுத்துமாறு கட்டளையிட்டார்கள்.
மேலும் கெட்டிச் சாணம், எலும்பு ஆகியவற்றைக் கொண்டு தூய்மை செய்யவேண்டாமென தடை விதித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)