🔗

அபூதாவூத்: 812

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

قَالَ لِي زَيْدُ بْنُ ثَابِتٍ: مَا لَكَ تَقْرَأُ فِي الْمَغْرِبِ بِقِصَارِ الْمُفَصَّلِ وَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَقْرَأُ فِي الْمَغْرِبِ بِطُولَى الطُّولَيَيْنِ»،

قَالَ: قُلْتُ: مَا طُولَى الطُّولَيَيْنِ؟ قَالَ: الْأَعْرَافُ وَالْأُخْرَى الْأَنْعَامُ،

قَالَ: وَسَأَلْتُ أَنَا ابْنَ أَبِي مُلَيْكَةَ، فَقَالَ لِي: مِنْ قِبَلِ نَفْسِهِ الْمَائِدَةُ وَالْأَعْرَافُ


812. மர்வான் பின் அல்ஹகம் அவர்கள் கூறியதாவது:

(மதீனாவின் ஆளுநராயிருந்த) என்னிடம் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், “நீங்கள் ஏன் மஃக்ரிப் தொழுகையில் மிகச் சிறிய அத்தியாயங்களையே ஓதுகிறீர்கள்! நபி (ஸல்) அவர்கள் நீளமான மிகப் பெரிய அத்தியாயங்கள் இரண்டை ஓத நான் பார்த்துள்ளேன்” என்று கூறினார்கள்.

இப்னு அபீ முலைகா (ரஹ்) கூறினார்:

நான் உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்களிடம் அந்த இரண்டு மிகப்பெரிய அத்தியாயங்கள் எவை என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அல் அஃராஃப் (7 வது) அத்தியாயமும், அல் அன்ஆம் (6 வது) அத்தியாயமும் என்று பதிலளித்தார்.

இப்னு ஜுரைஜ் கூறினார்:

நான் இப்னு முலைகா (ரஹ்) அவர்களிடம் அந்த இரண்டு பெரிய அத்தியாயங்கள் எவை? எனக் கேட்டேன். அதற்கவர் அல் மாயிதா (5 வது) அத்தியாயமும், அல் அஃராஃப் (7 வது) அத்தியாயமும் என்று பதிலளித்தார். இதை அவர் சுயமாக கூறியதாக கருதுகிறேன்.