🔗

அபூதாவூத்: 858

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

«إِنَّهَا لَا تَتِمُّ صَلَاةُ أَحَدِكُمْ حَتَّى يُسْبِغَ الْوُضُوءَ كَمَا أَمَرَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ، فَيَغْسِلَ وَجْهَهُ وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ، وَيَمْسَحَ بِرَأْسِهِ وَرِجْلَيْهِ إِلَى الْكَعْبَيْنِ، ثُمَّ يُكَبِّرَ اللَّهَ عَزَّ وَجَلَّ وَيَحْمَدَهُ، ثُمَّ يَقْرَأَ مِنَ الْقُرْآنِ مَا أَذِنَ لَهُ فِيهِ وَتَيَسَّرَ»، فَذَكَرَ نَحْوَ حَدِيثِ حَمَّادٍ، قَالَ: ” ثُمَّ يُكَبِّرَ فَيَسْجُدَ فَيُمَكِّنَ وَجْهَهُ – قَالَ هَمَّامٌ: وَرُبَّمَا قَالَ: جَبْهَتَهُ مِنَ الْأَرْضِ – حَتَّى تَطْمَئِنَّ مَفَاصِلُهُ وَتَسْتَرْخِيَ، ثُمَّ يُكَبِّرَ فَيَسْتَوِيَ قَاعِدًا عَلَى مَقْعَدِهِ وَيُقِيمَ صُلْبَهُ “، فَوَصَفَ الصَّلَاةَ هَكَذَا أَرْبَعَ رَكَعَاتٍ حَتَّى تَفْرُغَ، لَا تَتِمُّ صَلَاةُ أَحَدِكُمْ حَتَّى يَفْعَلَ ذَلِكَ


858. ஏழு அறிவிப்புகளில் நான்காம் அறிவிப்பு: ஹதீஸ் எண்-856 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. இதில்,

“மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ் கட்டளையிட்டபடி முழுமையாக அங்கத் தூய்மை செய்யாதவரை உங்களுடைய தொழுகை முழுமையடையாது. எனவே, அவர் தமது முகத்தையும், முழங்கைகள் வரை இரு கைகளையும் கழுவ வேண்டும்.

தன் தலையை ஈரக்கையால் தடவி (மஸ்ஹ் செய்து), கரண்டை வரை இரு கால்களைக் கழுவ வேண்டும். அதன்பின் ‘அல்லாஹு அக்பர்’ சொல்லி தக்பீர் கட்டி அல்லாஹ்வைப் புகழ்ந்து துதிக்க வேண்டும்.

பின்பு குர்ஆனில் அவருக்கு அனுமதிக்கப்பட்ட (இலகுவான தெரிந்த) வசனங்களை ஓத வேண்டும். (என்று உள்ளது. பின்பு மேற்கண்டவாறு நபிமொழி தொடர்கிறது.)

அதன்பிறகு தக்பீர் சொல்லி ஸஜ்தா செய்ய வேண்டும். (ஸஜ்தாவில்) தமது முகத்தைப் பூமியில் பதியச் செய்ய வேண்டும். தம் நெற்றியை பூமியில் பதியச் செய்து இணைப்புகள் சரியாக அவற்றுக்குரிய இடங்களில் ஆகி அமைதியடையும்வரை ஸஜ்தா செய்வார். (என்று ஹம்மாமின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.)

பின்பு, தக்பீர் சொல்லி தமது புட்டத்தின் மீது நேராக அமருவார். தமது முதுகை நேராக வைப்பார். பின்பு நான்கு ரக்அத்களையும் இவ்வாறுதான் தொழுகை முடியும் வரை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். இவ்வாறு செய்யாதவரை உங்களில் எவரின் தொழுகையும் முழுமையாகாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ரிஃபாஆ பின் ராஃபிஃ (ரலி)