” إِذَا رَكَعَ أَحَدُكُمْ فَلْيَقُلْ ثَلَاثَ مَرَّاتٍ: سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ، وَذَلِكَ أَدْنَاهُ، وَإِذَا سَجَدَ فَلْيَقُلْ: سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى ثَلَاثًا، وَذَلِكَ أَدْنَاهُ “،
886. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் ருகூஃ செய்தால், ‘ஸுப்ஹான ரப்பியல் அளீம்’ (மகத்தான என் இரட்சகனைத் துதிக்கிறேன்) என்பதை மூன்று முறை கூறட்டும். இதுவே குறைந்தபட்ச அளவாகும்.
மேலும், அவர் ஸஜ்தா செய்தால், ‘ஸுப்ஹான ரப்பியல் அஃலா’ (உயர்ந்த என் இரட்சகனைத் துதிக்கிறேன்) என்பதை மூன்று முறை கூறட்டும். இதுவே குறைந்தபட்ச அளவாகும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
இது முர்ஸலான அறிவிப்பாளர்தொடராகும். (ஏனெனில் இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும்) அவ்ன் பின் அப்துல்லாஹ் அவர்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களைச் சந்திக்கவில்லை.