«إِذَا أَتَيْتُمُ الْغَائِطَ فَلَا تَسْتَقْبِلُوا الْقِبْلَةَ بِغَائِطٍ وَلَا بَوْلٍ، وَلَكِنْ شَرِّقُوا أَوْ غَرِّبُوا» فَقَدِمْنَا الشَّامَ، فَوَجَدْنَا مَرَاحِيضَ قَدْ بُنِيَتْ قِبَلَ الْقِبْلَةِ، فَكُنَّا نَنْحَرِفُ عَنْهَا وَنَسْتَغْفِرُ اللَّهَ
9. மலம் சிறுநீர் கழிக்க நீங்கள் சென்றால், கிப்லாவை முன்னோக்க வேண்டாம்; கிழக்கு அல்லது மேற்கு திசையை முன்னோக்கி அமருங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நாங்கள் ஷாம் (சிரியா) நாட்டிற்கு வந்தபோது அங்கு கழிவறைகள் கிப்லாவின் திசையில் கட்டப்பட்டு இருப்பதைக் கண்டோம். (அதனால் மலம் கழிக்கும் போது) கிப்லா திசையிலிருந்து (முடிந்த அளவு) திரும்பிக்கொள்வோம்; இறைவனிடத்தில் மன்னிப்புத் தேடிக்கொள்வோம்.
அறிவிப்பவர்: அபூஅய்யூப் அல்அன்ஸாரீ (ரலி)