🔗

அபூதாவூத்: 970

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَخَذَ عَلْقَمَةُ بِيَدِي، فَحَدَّثَنِي أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ، أَخَذَ بِيَدِهِ، وَأَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ بِيَدِ عَبْدِ اللَّهِ، فَعَلَّمَهُ التَّشَهُّدَ فِي الصَّلَاةِ، فَذَكَرَ مِثْلَ دُعَاءِ حَدِيثِ الْأَعْمَشِ: «إِذَا قُلْتَ هَذَا أَوْ قَضَيْتَ هَذَا فَقَدْ قَضَيْتَ صَلَاتَكَ، إِنْ شِئْتَ أَنْ تَقُومَ فَقُمْ، وَإِنْ شِئْتَ أَنْ تَقْعُدَ فَاقْعُدْ»


970.

அல்கமா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

“அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் என் கையைப் பிடித்துக் கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு, தொழுகையில் தஷஹ்ஹுத் எவ்வாறு ஓத வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘நீ தஷஹ்ஹுத்தை முடித்து விட்டால், உனது தொழுகை பூர்த்தியாகி விட்டது. நீ விரும்பினால் எழுந்து செல்லலாம், அல்லது விரும்பினால் சிறிது நேரம் அமர்ந்து கொள்ளலாம்’ என்று கூறினார்கள்.”