أَنَّهُ رَكِبَ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ سُوَيْدٍ – أَخِي بَنِي حَارِثَةَ بْنِ الْحَارِثِ – يَسْأَلُهُ عَنِ الْعَوْرَاتِ الثَّلَاثِ، وَكَانَ يَعْمَلُ بِهِنَّ، فَقَالَ: مَا تُرِيدُ؟ فَقُلْتُ: أُرِيدُ أَنْ أَعْمَلَ بِهِنَّ، فَقَالَ: إِذَا وَضَعْتُ ثِيَابِي مِنَ الظَّهِيرَةِ لَمْ يَدْخُلْ عَلَيَّ أَحَدٌ مِنْ أَهْلِي بَلَغَ الْحُلُمَ إِلَّا بِإِذْنِي، إِلَّا أَنْ أَدْعُوَهُ، فَذَلِكَ إِذْنُهُ. وَلَا إِذَا طَلَعَ الْفَجْرُ وَتَحَرَّكَ النَّاسُ حَتَّى تُصَلَّى الصَّلَاةُ. وَلَا إِذَا صَلَّيْتُ الْعِشَاءَ وَوَضَعْتُ ثِيَابِي حَتَّى أَنَامَ
பாடம்:
மூன்று அந்தரங்க நேரங்கள்.
1052. ஸஃலபா பின் அபூமாலிக்-அல்குரழீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மூன்று அந்தரங்க நேரங்களை (முறைப்படி) கடைப்பிடித்து வந்த, பனூ ஹாரிஸா வின் சகோதரர் அப்துல்லாஹ் பின் ஸுவைத்… அவர்களை சந்தித்து அந்த நேரங்கள் குறித்து கேட்பதற்காக அவரிடம் சென்றேன். அப்போது அவர்கள், “நீங்கள் எதை விரும்புகிறீர்கள்?” என என்னிடம் கேட்டார். அதற்கு நான், “அதைச் செயல்படுத்த விரும்புகிறேன்” என்று கூறினேன்.
அப்போது அப்துல்லாஹ் பின் ஸுவைத் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
1 . நடுப்பகலில் நான் என் ஆடையைக் களைந்தால், என் வீட்டில் உள்ள பருவம் அடைந்த யாரும் என் அனுமதி இல்லாமல் என் அறைக்குள் நுழைய மாட்டார்கள். நான் அழைத்தால் தான் அனுமதி.
2 . அதிகாலை நேரம் வந்தும் மக்கள் நடமாட்டம் ஏற்படும் வரையிலும் (தொழுது முடிக்கும் வரையிலும்) யாரும் உள்ளே வரமாட்டார்கள்.
3 . இஷா தொழுதுவிட்டு நான் என் ஆடையை களைந்து உறங்கும் வரையிலும் யாரும் உள்ளே வரமாட்டார்கள்.