🔗

al-adabul-mufrad-1215: 1215

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ أَنْ يَنَامَ وَضَعَ يَدَهُ تَحْتَ خَدِّهِ الْأَيْمَنِ، وَيَقُولُ: «اللَّهُمَّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ»
حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ


பாடம்:

(தூங்கும் போது) தனது கையை வலது கன்னத்தின் கீழ் வைத்தல்.

1215. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தூங்கும்போது, தனது (வலது) கையைத் தனது வலது கன்னத்தின் கீழ் வைத்துவிட்டு, “அல்லாஹும்ம கினீ அதாபக யவ்ம தப்அஸு இபாதக” என்று கூறுவார்கள்.

(பொருள்: அல்லாஹ்வே! உன் அடியார்களை நீ மீண்டும் உயிர்க் கொடுத்து எழுப்பும் நாளில், உன்னுடைய தண்டனையிலிருந்து என்னைப் பாதுகாப்பாயாக!)


இந்தச் செய்தி வேறு ஒரு அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.