«رَغِمَ أَنْفُهُ، رَغِمَ أَنْفُهُ، رَغِمَ أَنْفُهُ» ، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ مَنْ؟ قَالَ: «مَنْ أَدْرَكَ وَالِدَيْهِ عِنْدَ الْكِبْرِ، أَوْ أَحَدَهُمَا، فَدَخَلَ النَّارَ»
21. நபி (ஸல்) அவர்கள், ”அவரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; அவரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; அவரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும் “என்று கூறினார்கள். ”யார் (மூக்கு), அல்லாஹ்வின் தூதரே?” என்று (நபித்தோழர்கள்) கேட்டனர். தம் பெற்றோரை முதுமைப் பருவத்தில் அடைந்தும் (அவர்களுக்கு உடலாலும் பொருளாலும் ஊழியம் செய்யாமல் இருந்து அதன் மூலம்) நரகம் சென்றவரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)