انْطَلَقْتُ فِي وَفْدِ بَنِي عَامِرٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: أَنْتَ سَيِّدُنَا، قَالَ: «السَّيِّدُ اللَّهُ» ، قَالُوا: وَأَفْضَلُنَا فَضْلًا، وَأَعْظَمُنَا طَوْلًا، قَالَ: فَقَالَ: «قُولُوا بِقَوْلِكُمْ، وَلَا يَسْتَجْرِيَنَّكُمُ الشَّيْطَانُ»
211. அப்துல்லாஹ் பின் ஷிக்கீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஆமிர் குலத்தார் குழுவுடன் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். நாங்கள், “நீங்கள் எங்கள் ஸய்யித்-தலைவர்” என்றோம். அதற்கு அவர்கள், “ஸய்யித் வளமும், உயர்வும் கொண்ட அல்லாஹ் ஒருவனே” என்றார்கள். “சிறப்பாலும் செல்வாக்காலும் எங்களுள் சிறந்தவர் நீங்கள்” என்றோம். அதற்கு அவர்கள், “உங்களுடைய கூற்றைக் கூறுங்கள். அல்லது அதன் ஒரு பகுதியைக் கூறுங்கள். ஷைத்தான் உங்களை இழுத்துச் செல்ல வேண்டாம்” என்றார்கள்.