🔗

al-adabul-mufrad-30: 30

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

مَا تَقُولُونَ فِي الزِّنَا، وَشُرْبِ الْخَمْرِ، وَالسَّرِقَةِ؟ قُلْنَا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: هُنَّ الْفَوَاحِشُ، وَفِيهِنَّ الْعُقُوبَةُ، أَلا أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الْكَبَائِرِ؟ الشِّرْكُ بِاللَّهِ  وَعُقُوقُ الْوَالِدَيْنِ، وَكَانَ مُتَّكِئًا، فَاحْتَفَزَ، قَالَ: وَالزُّور


பெற்றோர்களை நோவினை செய்வது தண்டனைக்குரியது என்பது பற்றிய பாடம்.

30. விபச்சாரம், மது அருந்துவது மற்றும் திருட்டு பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நாங்கள் அல்லாஹுவும் அவனது தூதருமே நன்கு அறிந்தவர்கள் என்று கூறினோம். அவை மானக்கேடான மற்றும் தண்டனைக்குறிய காரியங்களாகும் என்று கூறினார்கள். பெரும் பாவங்களை பற்றி உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா ? அவை அல்லாஹ்விற்கு இணை கற்பிப்பது பெற்றோரை நோவினை செய்வது மற்றும் பொய் பேசுவதும் ஆகும் என்று சாய்ந்த நிலையில் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இம்ரான் இப்னு ஹுசைன்.