كُنْتُ جَالِسًا فِي مَسْجِدِ الْمَدِينَةِ مَعَ عَمْرِو بْنِ عُثْمَانَ ، فَمَرَّ بِنَا عَبْدُ اللَّهِ بْنُ سَلاَّمٍ مُتَّكِئًا عَلَى ابْنِ أَخِيهِ ، فَنَفَذَ عَنِ الْمَجْلِسِ ، ثُمَّ عَطَفَ عَلَيْهِ ، فَرَجَعَ عَلَيْهِمْ فَقَالَ : مَا شِئْتَ عَمْرَو بْنَ عُثْمَانَ ؟ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا ، فَوَالَّذِي بَعَثَ مُحَمَّدًا صلى الله عليه وسلم بِالْحَقِّ ، إِنَّهُ لَفِي كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ ، مَرَّتَيْنِ : لاَ تَقْطَعْ مَنْ كَانَ يَصِلُ أَبَاكَ فَيُطْفَأَ بِذَلِكَ نُورُكَ
பாடம்:
தனது தந்தை இணைத்து வாழ்ந்த உறவினருக்கு நன்மை செய்தல்.
42 .
…நான் அம்ர் இப்னு உஸ்மான் என்பவருடன் மதினா பள்ளிவாசலில் அமர்ந்திருந்தேன். அப்போது தனது சகோரனின் மகனின் மீது சாய்ந்த நிலையில் அப்துல்லாஹ் இப்னு ஸல்லாம் எங்களை கடந்து சென்றார். பின்னர் அவையை விட்டு வெளியேறினார். அவர் மீது அக்கறையுடன் அவர்களின் பக்கம் திரும்பி. அம்ர் இப்னு உஸ்மான் அவர்களே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று இரண்டு அல்லது மூன்று முறை கேட்டுவிட்டு. எவன் முஹம்மது நபி (ஸல்) அவர்களை உண்மையை கொண்டு அனுப்பினானோ அவன் மீது ஆணையாக அவனுடைய வேதத்தில் உள்ளது (என்று இரண்டு அல்லது மூன்று முறை கூறிவிட்டு): “உன் தந்தை இணைத்து வாழ்ந்த உறவுகளை நீ துண்டிக்க வேண்டாம் அது உனது ஒளியை அணைத்து விடும்” என்று தனது தந்தை உபாதா அவர்கள் கூறியதாக ஸஃத் பின் உபாதா அறிவித்தார்.