🔗

al-adabul-mufrad-980: 980

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لَا تَدْخُلُوا الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا، وَلَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا، أَلَا أَدُلُّكُمْ عَلَى مَا تَحَابُّونَ بِهِ؟» قَالُوا: بَلَى، يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ»


980. நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரையில் சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளும் ஒரு செயலை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கூற,

மக்கள் “ஆம்” அறிவித்துக்கொடுங்கள்! என்று கூறினர். உங்களிடையே சலாத்தைப் பரப்புங்கள். (அதனால் நீங்கள் நேசம் கொள்ளலாம்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)